விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கள் நடத்தக்கூடாது!! அதிரடி உத்தரவு!! கொண்டாடுங்க மாணவர்களே!!

 
மாணவிகள்

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை முதல்  ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் மற்றும் சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்களும் திட்டமிட்டு வந்தனர்.

விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்புகள் பள்ளிக்கல்வி ஆணையரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து விடுமுறை நாட்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு  சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், ஆடியோ மூலமாக  சுற்றறிக்கையாக பள்ளிகள், ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் மெட்ரிக் என  அனைத்து பள்ளிகளிலும் தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது.  அரையாண்டு தேர்வுகளை பொறுத்தவரை  இந்த தேர்வுக்கு மாவட்ட அளவில், பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன

பள்ளி மாணவி விடுமுறை உற்சாகம்

 9 முதல் 12ம் வகுப்பு வரை டிசம்பர் 16ம் தேதி தொடங்கி இன்று டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. அதே போல் 1 முதல்  8ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிசம்பர் 19ம் தேதி முதல் இன்று டிசம்பர் 23 வரை நடைபெறுகிறது. அமாவாசை திதி கொடுத்ததும் இதைச் செய்ய மறக்காதீங்க இந்நிலையில், தமிழகத்தில்  உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையாக நாளை டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை, 9 நாட்கள் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என ஏற்கனவே  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அடுத்த ஆண்டு 2023ல் பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ம் தேதி முதல் திறக்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை
அதே நேரத்தில்  அரையாண்டு விடுமுறை,  கிறிஸ்துமஸ் பண்டிகைகளை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு  செல்ல முடிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில்  கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இன்றும், நாளையும் சென்னையிலிருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என  போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

புதுவருஷம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

From around the web