4 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்துக் கொலை.. தாய் மாமன் போக்சோவில் கைது!

திருப்பதி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 4 வயது சிறுமி . இவரது தாய் மாமன் நாகராஜு (24) . சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து விளையாடுவது வழக்கம். நேற்று மாலை சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கு வந்த நாகராஜு சிறுமியை கடைக்கு அழைத்துச்சென்று தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்தார். பின்னர் ஆர்.ஏ புரத்தில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி உயிருடன் இருந்தால் நடந்ததை பெற்றோரிடம் கூறுவார் என நினைத்தார். பின்னர் சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றார். இதையடுத்து சிறுமியின் சடலத்தை அங்குள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் வீசிவிட்டு சென்றுள்ளார். தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை காணாததால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர்.
மகளைக் காணாததால், இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடைசியில் அந்த பெண் நாகராஜு என்பவருடன் சென்றது தெரியவந்தது. நாகராஜுவை கைது செய்து விசாரணை நடத்தியதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நாகராஜு சிறையில் அடைக்கப்பட்டார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!