பகீர்!! 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை!!

 
கிணறு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டையூர் பகுதியில் வசித்து வருபவர்  ஈஸ்வரன். இவரது மனைவி  35 வயது பாண்டீஸ்வரி. இவர்களுக்கு 2 மகள், 1 மகன். ஈஸ்வரனுக்கு உப்புச்சத்து அதிகம். இதனால் கடந்த ஒரு மாத காலமாக கடும் அவதிப்பட்டு வந்தார். இதனைஅடுத்து  மதுரை தனியார் மருத்துவமனையில்   சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பு  உயிரிழந்து விட்டார். 

கிணறு
கணவன்  உயிரிழந்ததும் மனைவி   பாண்டீஸ்வரி, மிகுந்த மனக்குழப்பத்தில் ஆழ்ந்தார். எப்படி 3 குழந்தைகளை வளர்ப்பது . செலவுக்கு என்ன செய்வது , வருமானம் எதுவும் இல்லாத நிலையில்  3 குழந்தைகளுடன் ஈஸ்வரனுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அந்த வழியாக   சென்றவர்கள் கிணற்றில் சடலங்கள் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கிணறு நீச்சல் மீட்பு
தீயனைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் மனைவி பாண்டிஸ்வரி, மகள்கள் வைத்தீஸ்வரி, காளீஸ்வரி, மகன் விக்னேஸ்வரன் ஆகிய 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web