கோர விபத்து... மேம்பால சுவரில் மோதி உருக்குலைந்த சொகுசுப் பேருந்து... 12 பேர் பலி; 41 பேர் படுகாயம்!

 
விபத்து
 


ராஜஸ்தான் மாநிலம் சலசாரில் இருந்து லஷ்மங்கருக்கு நேற்று மதியம் தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், மேம்பாலத்தின் சுவரில் பயங்கர வேகத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 41 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் லஷ்மங்கருக்கு செல்லும் வழியில் நெடுஞ்சாலையில் திரும்பும் போது மேம்பாலத்தின் சுவரில் வேகமாக  மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதுமே நொறுங்கியது. 

விபத்து

விபத்துக் குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்த நிலையில், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்பு பணிகளில் உடனடியாக ஈடுபட்ட நிலையில், 41 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி புவன் பூஷன் யாதவ் கூறுகையில், “காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லஷ்மங்கர் மற்றும் சிகார் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!