11ஆண்டுகள் கழித்து பிரபல நடிகருக்கு பெண்குழந்தை!!
தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. 2012 ல் நடிகர் ராம்சரண் மற்றும் உபாசனா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. இவர்களிடம் பல நேரங்களில் கேட்கப்பட்ட போது எப்போது தாங்கள் பெற்றோராக தயாராகிறோமோ அப்போது குழந்தை பெற்றுக் கொள்வோம் என்று ராம்சரண் -உபாசனா இருவருமே கூறிவந்தனர்.
இந்நிலையில் 2022 டிசம்பரில் உபாசனா கர்ப்பம் தரித்து இருப்பதாக நடிகரும், ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவி பதிவிட்டு இருந்தார். இதையடுத்து உபாசனா கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்நிலையில் இன்று நடிகர் ராம்சரண் - உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து ஐதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் அப்பலோ மருத்துவமனை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உபாசனா மற்றும் ராம்சரண் தம்பதிக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.இவரின் மகனான ராம்சரணும் தந்தையைப் போலவே தெலுங்கில் முண்ணனி கதாநாயகனாக இருந்து வருகிறார். இவர் நடிகர் , தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முக திறமைவாய்ந்தவர். ராம்சரண் சிருந்தா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில் அடுத்து எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான மகதீரா படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலம் இன்று டாப் நடிகராகியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!