இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!! மாணவர்களே உடனே அப்ளை பண்ணுங்க!!
தமிழகத்தில் மே 8ம் தேதி 12ம் வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் இன்று திட்டமிட்டபடி நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது மருத்துவப்படிப்புக்களுக்கான பிபார்ம், பிஎஸ்சி நர்சிங் இவைகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது
நடப்பு கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங்க், பிஓடி, பிபிடி, பி.பார்ம் படிப்புகளில் சேர ஆன்லைனிலும், அரசு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் ஜூன் 19 இன்று திங்கட்கிழமை காலை 10 மணிமுதல் ஜூன்28ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளிட்டுள்ளது. அதில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் அதாவது பாராமெடிக்கல் சம்பந்தப்பட்ட படிப்புக்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்திற்கான முன்பதிவு இன்று முதல் ஜூன்28ம் தேதி வரை நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!