பகீர் !! பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை!!

 
பாலியல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அய்யம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் 40 வயது செந்தில் குமார். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார். இவருக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவர்களுக்கு உறவினர்கள் யாரும் கிடையாது இதனால்  செந்தில் குமாரும், அவரது மகளும் தனியாக வசதித்து வந்தனர்.

குடும்ப வன்முறை பெண்கள் பாலியல் பலாத்காரம்


பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தனது மகளிடம் செந்தில் குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபடத்தொடங்கினார். அத்துடன் இதனை வெளியில் கூறினால்   கொலை செய்து விடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதன் பிறகு இந்த பாலியல் அத்துமீறல் தொடர்ந்தது.  இதனால் விரக்தியடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.  அக்கம் பக்கத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு அவரிடம் நடந்த பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது மாணவி கூறிய தகவல்களைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து   அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து செந்தில் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமை
 இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில்  பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்திற்காக செந்தில் குமருக்கு ஆயுள் தண்டனையும், சிறுமியை கொலை செய்வதாக மிரட்டிய குற்றத்திற்காக கூடுதலாக 7 ஆண்டுகள் சிறை தண்டனயும், ரூ.10000அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web