வங்கி கடன்.. தவணை கட்டுவதற்காக பெற்ற மகனை 9 ஆயிரத்திற்கு விற்ற பெற்றோர்கள்!
பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் வங்கிக் கடனை அடைப்பதற்காக தனது சொந்த மகனை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள ராணிகஞ்ச் தொகுதியின் பச்சிரா கிராமத்தில் வசிக்கும் முகமது ஹாரூன்-ரெஹானா கட்டூன் தம்பதியர் வறுமை காரணமாக தனியார் நிதி நிறுவனம் ரூ. 50,000 கடனாக பெற்றுள்ளனர். இந்தக் கடனின் தவணை கட்ட முடியாமல் தனது குழந்தையை ரூ. 9,000-க்கு விற்பனை செய்துள்ளனர்.

“தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து கடந்த மூன்று மாதங்களாக கடனுக்கான தவணை நிலுவையில் இருந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். தவணை செலுத்துமாறு கூறி, நிறுவனத்தின் முகவர்கள் எங்களை தொந்தரவு செய்தனர். கடனை திருப்பி செலுத்தாத எங்கள் மீது வழக்கு தொடருவோம் என்றனர். இதையடுத்து, கடனை அடைக்க, குழந்தையை விற்கும்படி, அண்ணன் தன்வீர் கூறியதால், குழந்தையை விற்க முடிவு செய்தேன்,' என, தாய் ரெஹானா கூறினார்.
இந்த தம்பதிக்கு 5 மகன்கள், 3 மகள்கள் என 8 குழந்தைகள் உள்ளனர். இதில், குர்பான் என்ற ஒன்றரை வயது குழந்தையை விற்றுள்ளனர். ரெஹானாவின் சகோதரர் தன்வீர் ஏற்பாடு செய்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்வீர் வீட்டில் விடப்பட்ட குழந்தையை ஆரிப் என்பவரிடம் ரூ.9 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். ஆனால், குழந்தைக்கு ரூ. 45,000 ஆரிப்பின் உறவினர் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆரிஃபிடம் இருந்து தன்வீர் எவ்வளவு பணம் பெற்றார் என்று தனக்குத் தெரியாது என்று ரெஹானா காவல்துறையிடம் கூறினார். தனது குழந்தையை விற்கும்படி தன்வீர் வற்புறுத்தியதாகவும் அவர் கூறினார்.
ஆரிப் குழந்தைக்கு ரூ. 2 லட்சத்துக்கு பெங்களூரில் உள்ள ஒருவரிடம் விலை பேசியுள்ளார். குழந்தையை பெங்களூருக்கு அனுப்பும் முன் தகவல் அறிந்த போலீசார், ஆரிப் வீட்டில் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டு, குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் பெற்றோர் முகமது ஹாரூன் மற்றும் ரெஹானா கட்டூன் இருவரும் போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், குழந்தையின் உறவினர் அர்சாதியின் கூற்றுப்படி, ரெஹானா தனது மகனை மீட்டெடுக்க 9,000 ரூபாயுடன் ஆரிப்பின் வீட்டிற்கு சென்றார். ஆனால் குழந்தைக்காக ரூ.45,000 கொடுத்ததாக கூறி குழந்தையை ஒப்படைக்க மறுத்துள்ளார் ரெஹானா, கிராம மக்களிடம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
