கடற்கரையில் அதிசயம்... நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்!

 
நீல அலைகள்

 

 
பொதுவாக கடல்களில் கணக்கிலடங்கா  உயிரினங்கள் வாழ்கின்ற  பல்லுயிர் நிறைந்த பகுதி. குறிப்பாக கண்களுக்கு தெரியாத bacteria, fungi, algae போன்ற உயிரினங்கள் அதிகமாக வாழக்கூடிய இடமாகும். கடலில் வாழும் ஒரு செல் உயிரியான டைனோ ப்ளாச்சுலேட்  , கடல் மின்மினி பூச்சி என அழைக்கப்படுகிறது. இது கடலில் உள்ள நீரின் தன்மை மற்றும் அதற்கான ஊட்டச்சத்து சரியான விகிதத்தில் அமையும்போது சூரிய வெளிச்சத்தில் சார்ஜ் செய்து கொண்டு, எப்படி சோலார் விளக்குகள் எரிகிறதோ அதுபோல இருளில் ஒளி வீசுகிறது.
இந்த ஒரு செல் உயிரியின் உடலில் உள்ள வேதிப்பொருளான லூசிபெரின், லூசிபரேஸ் இவைகள்  ஆக்சிஜனோடு சேரும்போது, ஒளி வெளியாகிறது. இதற்கு பெயர்தான் Bioluminescence. பல வகையில் இந்த உயிரி இருப்பதால், அவை வெளியிடும் நிறங்களும் அவ்வப்போது மாறுபாடு அடையும்.  இந்தப் பாசிகள் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான்  ஒளிர்வதாகக் கூறப்படுகிறது.  

நீல அலைகள்
மீன்கள் இந்த பாசியை சாப்பிட முயலும்போது இந்த பாசி தன்னிடம் இருக்கின்ற  ஒளிர்வைக்காட்டி, மீன்கள் வந்தால் அவற்றை பயமுறுத்தி திசை திருப்பும். இதே போன்ற  யுக்தியை பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.  பாசிகள் கடலில் எப்போதும் இருந்தாலும், அவை அதிகமாகும்போது மட்டுமே இந்த வகையில் நிறம் மாறுகின்றன.  இதேபோன்ற நிகழ்வு உலகின் பல்வேறு கடற்பகுதியில் நடந்திருக்கிறது. 2023ல்  அக்டோபர் மாதத்தில் ECR கடற்கரையில் இந்த நீல ஒளி நிகழ்வு நடந்திருக்கிறது. சென்னையில் இருக்கும் ஒரே ஒளிரும் கடற்கரை இதுதான்.

நீல அலைகள்

இதேபோல் உலகில் பல கடற்கரைகள் இரவு நேரத்தில் ஒளிரும் தன்மையுடையவை.அந்தமானில் உள்ள ராதா நகர் கடற்கரையில் ஹேவ்லாக் தீவு அமைந்திருக்கும் கடலில் இது போல் ஏற்படுவது வாடிக்கை தான். அதேபோல் லட்சத்தீவு பகுதிகளில் உள்ள பங்காரம் கடற்கரையிலும் இப்படி நடக்கும். இங்கு பாசி, ஜெல்லி மீன்களால் இது போன்று நீல நிறத்தில் ஒளிர்வதாக கூறப்படுகிறது.  அதேபோல் கோவாவில் உள்ள பலோலம் கடற்கரையிலும் இது போன்ற அற்புத காட்சி நிகழ்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. உடுப்பியில் உள்ள மட்டு கடற்கரை, மும்பையில் உள்ள ஜூஹு கடற்கரை ஆகியவை இரவு நேரங்களில்  நீல நிறத்தில் ஜொலிக்கும். இதனை கண்டு ரசிக்கவும், களிக்கவும் இரவு நேரத்தில் கடற்கரையில் நிறையப்பேர் வருவதுண்டு. சென்னையை பொறுத்தவரை இது போன்ற நிகழ்வுகள் ஜூன் முதல் செப்டம்பர் வரை நிகழும் எனக்  கூறப்படுகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!