அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து பெரும் விபத்து.. 12பேர் பலியான சோகம்!

ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக சட்டவிரோதமாக நுழைந்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் எகிப்தை சேர்ந்த 13 பேர் சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய திட்டமிட்டிருந்தனர். லிபியா அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக படகு கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த 12 அகதிகள் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்த லிபியா கடற்படையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரை மீட்டனர்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், உயிரிழந்த 12 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து லிபியா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!