சென்னை கலெக்டராக அருணா ஐஏஎஸ் நியமனம்!!
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் . இவருக்கு பதிலாக சென்னையின் புதிய ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி அருணா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவின் பேரில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்தஜோதி தற்போது , அச்சு மற்றும் எழுதுபொருள் துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மே மாதம் 16ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அந்த வகையில், தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளார். அமிர்த ஜோதி 2021 ம் ஆண்டு ஆண்டு ஜூன் மாதம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!