பெங்களூருவில் விபரீதம்... அக்கா போர்வையை தரல... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை...!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் சாமராஜ் பேட்டை பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வரும் ஷ்ரவ்யாவுக்கு வயது 19. இவர் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது உடன் பிறந்த அக்காவுடன் சண்டை போட்டதில் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். திடீரென மன அழுத்தம் அதிகமாகி தற்கொலை செய்து கொண்டார். பெட்ஷீட்டை வைத்துக் கொள்ளும் விஷயத்தில் அக்கா-தங்கை இடையே பிரச்சனை ஏற்பட்டது.

அதாவது ஷ்ரவ்யா தனது அக்காவுடன் அக்டோபர் 18ம் தேதி இரவு தனது அக்காவுடன் போர்வைக்காக சண்டை போட்டுள்ளார். பெற்றோர் இருவரையும் சமாதானமாக்கி தூங்க வைத்தனர்.இந்நிலையில் ஷ்ரவ்யா பெட்ஷீட் பிரச்சனையை நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது. மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கதறித் துடித்த பெற்றோர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் அந்த தகவலின் படி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஷ்ரவ்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஒரு சிறிய பிரச்சனைக்காக இளம் பெண் விபரீத முடிவு எடுத்ததது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
