அரசு அலுவலகத்தில் சாதிப் பெயரை சொல்லி தினமும் டார்ச்சர்.. மனமுடைந்த அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!

 
பிரதீப் உபாத்யாய்
விநோதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பல இடங்களில் உயர்பதவியில் இருப்பவர்கள் சாதி வேறுபாடு காட்டி, தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களைக் கொடுமைப்படுத்தி வரும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒருவரை அவரது மேலதிகாரி சாதியைக் காரணம் காட்டி கொடுமைப்படுத்தி வந்த நிலையில், மனமுடைந்து அவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்தவர் பிரதீப் உபாத்யாய். அரசு துறையில் பணியாற்றி வரும் இவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது மூத்த அதிகாரி திபேந்திர படேல். அவர் மாற்று சமூகத்தை சேர்ந்தவர். இவர் தனக்கு கீழ் பணிபுரியும் பிரதீப்பை சமூக ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

தினமும் பிரதீப்பை சாதி ரீதியாக திட்டி, புழுவைப் போல நடத்தி சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து பிராமணர்களை அவதூறாகப் பேசி வேலையிலிருந்தும் இவரை ஒதுக்கித் தினமும் துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனமுடைந்த பிரதீப் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ்

அவரது உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்! 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web