மண்டல அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!! தொடர் மழை எச்சரிக்கை !!
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அவற்றை கடைப்பிடிக்கவும், உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய பகல் பொழுது முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அவசிய காரணங்களின்றி வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம். அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சென்னை சாலைகளில் நீர் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சுரங்கப்பாதைகளில் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றும் முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. எங்கேனும் தண்ணீர் தேங்கினால், அதற்கான காரணத்தை கண்டறிந்து, உடனடியாக சம்பந்தப்பட அதிகாரிக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு மண்டலம்/வார்டுகளும் மழைநீர் வடிகால்களில் அடைப்புகளை சரிசெய்ய தனி குழுக்களைக் அமைக்க வேண்டும்.
சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். சென்சார் அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பு அனைத்து சுரங்கப்பாதைகளிலும் நன்றாகச் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
சூறைக்காற்று காரணமாக சாலைகளில் மரம் விழுந்தால் மரங்களை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்களுடன் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்”என அறிவுறுத்தியுள்ளார்.
வளிமண்டல நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி மின்னல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சென்னையில் முக்கிய சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சுரங்கப்பாதைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. மரங்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் அலுவலகம் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு சென்று கொண்டு இருக்கின்றனர். சென்னையின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர் மழை விடாமல் பெய்து வருகிறது. மழை காரணமாக ஜூன் மாதத்தில் 1991மற்றும் 1996ம் ஆண்டுக்கு பிறகு 27 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது ஆச்சரியமான விஷயம் தான் என்கிறார் வெதர்மேன் பிரதீப்ஜான். நடப்பு கல்வியாண்டை பொறுத்தவரை கடும் வெயில் காரணமாக இந்த மாதம் 12 நாட்கள் தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஜூன் 12ம் தேதி 6-12ம் வகுப்பு வரையும், 1-5ம் வகுப்புகளுக்கு 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் அதன்பின் மீண்டும் 12, 14 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. தொடர் கனமழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை கொட்டித் தீர்த்தாலும் அலுவலகப் பணிக்கு செல்பவர்கள் அலுவலகம் செல்ல வேண்டியது கட்டாயம். வீட்டில் இருந்தே படியே வொர்க் பர்ம் ஹோம் பார்ப்பவர்களுக்கு சற்று ஆறுதலான விஷயம். கனமழை காரணமாக அலுவலகம் செல்ல விரும்பினாலும் மின்னல் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வ வருகின்றன. அடுத்த 2 மணி நேரத்திற்கு தீவிர மின்னல்கள் இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த மின்னல்கள் முகில் - புவி வ மின்னல்கள் ஆகும். அதாவது மேகத்தில் இருந்து பூமியை நோக்கி மின்னல்கள் அடிக்கும் வகை ஆகும். சென்னைக்கு அருகே உள்ள வங்கக்கடல் பகுதியில் இருந்து சென்னையை நோக்கி மேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கரு மேகங்கள் வலிமை இழக்காமல் தொடர்ந்து மின்னூட்டம் பெற்ற முழு வலிமையோடு சென்னைக்கு வருவதால் தொடர் மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மின்னல்களுக்கு இடையே அலுவலகம் செல்வது பாதுகாப்பு இல்லை என்பதால் அலுவலக ஊழியர்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அதோடு மழையால் தண்ணீர் தேங்கிய காரணத்தால் சென்னையில் பல பகுதிகளில் குறிப்பாக கத்திப்பாரா உள்ளிட்ட முக்கிய சாலைகள் கூட மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாகவும் அலுவலக ஊழியர்கள் அலுவலகம் செல்வது பெரும் சவாலாகி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!