அடியாட்களோடு வந்து மிரட்டுகிறார்... இசையமைப்பாளர் தேவா மகள் மீது பெண் குற்றச்சாட்டு.. பகீர் வீடியோ!

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மகள் மீது, அவரது வீட்டில் குடியிருக்கும் பெண் குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனியில் இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயபிரதாவுக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை தீபிகா என்பவருக்கு ஜெயபிரதா வாடகை விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் தீபிகா, திடீரென கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “தனது வீட்டில் கத்தியுடன் புகுந்த 7 நபர்கள் தன்னை மிரட்டிவிட்டு வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களையும் அடித்து உடைத்து விட்டு சென்றதாகவும், தான் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்” எனவும் கதறியழுதபடி கூறுகிறார்.
மேலும் ‘எனக்கும் எனது கணவரின் உயிருக்கும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு காரணம் தேவா மகள் ஜெயபிரதா தான்’ என தெரிவித்துள்ளார். இது குறித்து தீபிகா அவசர காவல்துறை கட்டுப்பாட்டு எண் 100-க்கு கால் செய்து தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததும் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ஜெயப்பிரதாவின் வீட்டிற்கு தீபிகா, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக வாடகைக்கு வந்ததாகவும், கடந்த ஒராண்டு காலமாக வாடகையை தராமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயப்பிரதா, வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது முறையாக வாடகை செலுத்துவதாகக் கூறிய தீபிகா மீண்டும் வாடகை அளிக்காமல் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மாதம் 25 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு குடியேறிய நிலையில், கடந்த ஓராண்டு காலமாக வாடகை தராமல் இருந்த தீபிகா, தனது ஹார்டுவேர்ஸ் கடை நஷ்டத்தில் இயங்கி வருவதால் தர இயலவில்லை என ஜெயப்பிரதாவிடம் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனினும், தற்போது தீபிகா வீடியோ வெளியிட்டு அதில், தன்னையும் தன் கணவரையும் அடியாட்களை வீட்டிற்கு அனுப்பி மிரட்டியதாகக் கூறிய நிலையில் அது தொடர்பாக எவ்வித புகார் தீபிகா அளிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!