மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான்... குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டிய வீடியோ வெளியீடு!
பிரபல யூடியூபர் இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இர்பானின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருந்த நிலையில் துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்து தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார்.

இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.இதனையடுத்து ஜூலை மாதம் 24ம் தேதி, இர்பான் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அவர் தனது மனைவி பிரசவ வலியால் துடிக்கும் காட்சி, குழந்தை பிறந்தவுடன் அதை கையில் ஏந்தி இருக்கும் காட்சிகளை பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டிருந்தார். அந்த வீடியோக்கள் 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி உரிய அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அறைக்குள் செல்ல வேண்டும். முறையான அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டும் கத்தரிக்கோல் பிடிக்க வேண்டும். யூடியூபர் இர்பான் அறுவைச் சிகிச்சை அறைக்குள் வீடியோ கேமராவை எடுத்து சென்றது மட்டுமின்றி குழந்தைக்கும் தாயுக்கும் இடையே உள்ள தொப்புள்கொடியை வெட்டியதற்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
