தீபாவளி மட்டும் கிடையாது... ஐப்பசியில் இந்த முக்கிய வழிபாட்டு முறைகளை மிஸ் பண்ணாதீங்க!

நாடு முழுவதுமே கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்டி உள்ளது. தமிழகத்தில் மக்கள் உற்சாகமாக தீபாவளி பர்சேஸ், பலகாரங்கள் என்று துவங்கியிருக்கின்றனர்.ஆனால், ஐப்பசியில் தீபாவளியை விட அதிமுக்கிய பண்டிகைகள் நிறைந்துள்ளன. இந்த முக்கிய திருவிழாக்களைத் தவற விடாதீங்க. ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று அழைக்கிறோம். இந்த ஐப்பசி மாதத்தில் தான் இரவும், பகலும் சமமான நேரமாக அமையும். துலா என்றால் தராசு. இந்த ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது புண்ணியம்’ என்கிறது நமது சாஸ்திர நூல்கள்.
அதன் தொடர்ச்சியாக தான் தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆச்சா என்கிறோம். ஏன் தெரியுமா? இந்த ஐப்பசி மாதத்தில் தான் மற்ற நதிகளும், புண்ணிய தீர்த்தங்களும் காவிரியில் சேரும் மாதம். இதனால் இந்த மாதத்தில் காவிரியில் நீராடுபவர்கள் பஞ்ச மகா பாவங்களிலிருந்தும் விடுபடுவர் என்பது ஐதிகம்.மேலும் இந்த மாதத்தில் காவிரியில் நீராடினால் காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம் என்கின்றன நமது புராணங்கள்.
இந்த ஐப்பசி மாதத்தில் தான் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதிகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாவங்களை போக்கிக் கொள்கின்றன. இதனால் மனிதர்களும் இம்மாதத்தில் நீராடினால் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை இவற்றை அள்ளி வழங்கும்.
காவிரியில் நீராடி நீர்க்கடன் செலுத்துபவர்களின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைவதாக ஐதிகம். ஐப்பசி மாதத்தில் நீராடல் ஒரு பக்கம் விசேஷம். மற்றொரு பக்கம் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகமும் சிவாலயங்களில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படும்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!