காற்று மாசுபாட்டை குறைக்க லேட்டஸ்ட் டிரெண்ட்!
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லிக்கு அருகாமையில் உள்ள ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மீதமுள்ள விவசாய பொருட்களை எரிப்பதால் வரும் புகை டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.

டெல்லியில் அதிகரித்து வரும் வாகன பயன்பாடு, காற்று மாசு அதிகரிக்க காரணமாக அமைகிறது. அதனை கட்டுப்படுத்தவும், வாகன கட்டுப்பாட்டை அரசு அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. காற்று மாசுவை கட்டுப்படுத்த வீதிகளில் தண்ணீரை ஸ்ப்ரே போல தெளிக்கும் நடைமுறையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.சமீபத்திய காற்று மாசு குறியீட்டில் காற்று மாசுபாடு இன்று AQI 293 எனும் மோசம் எனும் நிலையில் இருக்கிறது. நேற்று இதன் அளவீடு பல்வேறு பகுதிகளில் AQI 350 முதல் 380 எனும் மிகவும் மோசம் எனும் அளவில் இருக்கிறது.

இதனை கட்டுப்படுத்த தண்ணீர் தெளிப்பான் வாகனம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காற்று மாசுவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆனந்த் விஹார் உட்பட பல்வேறு பகுதியில் ஸ்ப்ரே செய்து தண்ணீர் காற்றில் தெளிக்கப்பட்டு வருகிறது.ஸ்ப்ரே செய்யும் வாகனங்கள் மூலம் சராசரியாக தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீரானது அதிக அழுத்தம் கொண்டு பனி போல தெளித்தால் மட்டுமே அது காற்று மாசுவை குறைக்க பயன்படும். இல்லையெனில் அது காற்று மாசுவை குறைக்க பயன்படாது எனவும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
