முஸ்லீம் ஆண்கள் 4 மனைவிகளை திருமணம் செய்யலாம்... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மஹாராஷ்டிர மாநிலம், தானேவில் வசித்து வரும் முஸ்லிம் இளைஞருக்கு ஏற்கனவே 2 மனைவியர். இந்நிலையில், அவர் மூன்றாவதாக அல்ஜீரியாவைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொண்டார். தற்போது தங்களின் 3வது திருமணத்தை பதிவு செய்யக்கோரி, தானே மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தார்.
மஹாராஷ்டிரா திருமண பதிவு சட்டத்தின் கீழ், மாநகராட்சி அதிகாரிகள் முஸ்லிம் இளைஞரின் 3வது திருமணத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து அந்த நபர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோலபவல்லா மற்றும் சோமசேகர் சுதர்சன் அமர்வு முஸ்லிம் தனிநபர் சட்டம் ஒரே சமயத்தில் நான்கு பெண்களை மணக்க அனுமதிக்கிறது.
அப்படி இருக்கும் போது, முஸ்லிம் ஆணின் 3வது திருமணத்தை பதிவு செய்ய மறுப்பது முற்றிலும் தவறானது. இரண்டு வாரத்திற்குள் தேவையான ஆவணங்களை திருமண ஜோடிகள் மாநகராட்சியிடம் சமர்ப்பித்தால் போதும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, 10 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!