இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி | பிரம்மாண்ட ரோடு ஷோவுக்கு ஏற்பாடு!

 
பிரியங்கா காந்தி
 

கேரள மாநிலத்தில் காலியாக உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அக்டோபர் 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி. இதனையொட்டி அவர் நேற்று தாய் சோனியா காந்தியுடன் கேரளா வந்து சேர்ந்தார். 

2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரே பரேலி என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற ஏதேனும் ஒரு தொகுதியை அவர் கைவிட வேண்டிய சூழல் உருவான நிலையில் ஜூன் 17 அன்று ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து காங்கிரஸ் எதிர்பார்க்கப்பட்டது போலவே பிரியங்காவை வேட்பாளராக அறிவித்தது. பாஜக சார்பில் நவ்யா ஹாரிதாஸ், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மொக்கேரி ஆகியோர் களம் காண்கின்றனர்.

இந்நிலையில் இன்று பிரியங்கா காந்தி, சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கலுக்கு முன் வயநாட்டில் கல்பேட்டா பேருந்து நிலைய பகுதியில் பிரியங்கா, ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்துகின்றனர். காலை 11.45 மணியளவில் இந்த பேரணி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் பிரியங்கா காந்தி தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார்.

பிரியங்கா காந்தியின் தேர்தல் அரசியல் பிரவேசம் இது. அதனாலேயே வயநாடு மீண்டும் ஒரு நட்சத்திர தொகுதியாக கவனம் பெறுகிறது. பிரியங்கா காந்தி தேர்தல் களம் காணலாம் என்ற பேச்சுக்கள் 2019 மக்களவைத் தேர்தல் தொட்டே உலாவந்த நிலையில் இப்போது தான் அது சாத்தியப்பட்டுள்ளது. 52 வயதில் தேர்தல் களம் காணும் பிரியங்கா காந்தி ஒருவேளை தொகுதியைக் கைப்பற்றினால் நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என மூவரின் இருப்பும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பிரியங்கா காந்தி

வயநாடு காங்கிரஸின் கோட்டையாகவே கருதப்படுவதால், பிரியங்கா இங்கே எளிதாக வென்று விடுவார் என்றே கணிக்கப்பட்டு அவர் களம் இறக்கப்பட்டுள்ளார். ஆனால் வயநாடு நிலச்சரிவுக்குப் பிந்தைய சூழல் எப்படி இருக்கும் என்பது பற்றிய கணிப்புகள் இன்னும் தெளிவாக வெளிவரவில்லை. இருப்பினும் இப்போதைக்கு பிரியங்கா பலமான வேட்பாளரகவே அறியப்படுகிறார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!