குஜராத்தில் வெடித்த கலவரம்!! போலீசார் மீது கல்வீச்சு!! 4 காவலர்கள் படுகாயம்!! 174 பேர் கைது!!!
குஜராத் மாநிலத்தில் உரிமம் பெறாமல் கட்டப்பட்ட மசூதியை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. குஜராத் ஜூனாகத்தில் உள்ள மாஜிவாடி பகுதியில், அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இந்த மசூதி கட்டப்பட்டுள்ளதாக உள்ளாட்சி நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால் இடிக்கப்படும் என்ற நோட்டீசை கண்டதும் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடும் எதிர்ப்புக்களையும், கண்டனக்குரல்களையும் எழுப்பினர். மசூதி அமைந்துள்ள பகுதியில் 600க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் , போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இடையில் புகுந்த மர்ம கும்பல் ஒன்று கற்களை சராமாரியாக வீசத் தொடங்கியது.இதில் காவலர்கள் சிலர் படுகாயமடைந்தனர்.அதே போல் பேருந்து ஒன்றின் மீது கல் எறிந்ததால் பயணிகள் சிலருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதன் பிறகு காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தது. இந்நிலையில், கல் எறிந்த கும்பலை பிடித்த காவல்துறையினர், அவர்களை வரிசையாக நிற்க வைத்து தடியை கொண்டு நையப்புடைத்தனர். இதில் காவலர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். குடிமகன்களில் ஒருவர் பலியானார். 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!