கடலில் குதித்த ரோகித் சர்மா!! ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி!!

 
ரோகித் சர்மா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனை வீரர்கள் தம் குடும்பத்துடன்  கொண்டாடிவருகின்றனர். அந்த வகையில் ரோகித் சர்மா மனைவி ,மகளுடன் கடற்கரைக்கு சென்று விடுமுறையை கொண்டாடியுள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஐசிசி கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியக் கிரிக்கெட் அணி கோப்பைகளை வெல்லாமல் தற்போது இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவி இருக்கிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

Rohit-sharma

இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து, வீரர்களுக்கு சிறிது நாள் ஓய்வு கிடைத்துள்ளது. 

இந்நிலையில் இந்த விடுமுறையை ரோகித் சர்மா அவரது குடும்பத்துடன் செலவிட்டுள்ளார். கடற்கரையில் அவரது மனைவி ரித்திகா மகள் சமிரா ஆகியோருடன் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Rohit Sharma

இதில் சுவாரஸ்யமாக நிகழ்வை ரோகித் சர்மாவின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்ரோயில் பகிர்ந்துள்ளார். அதில் தனது கைப்பேசி கடலில் விழுந்ததாகவும் அதனை ரோகித் கடலில் குதித்து எடுத்துக் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web