ஆய்வில் அதிர்ச்சி... நாடு முழுவதும் 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு... தமிழகத்தில் மட்டுமே 75,702 பேருக்கு காசநோய்!
தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது ஆய்வில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. வரும் 2025ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என, காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் காச நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று நேரிடையாக வழங்கப்படுகின்றன. வீடுகளிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் 'ஸ்கேன்' கருவிகளையும் வீடுகளுக்கே அனுப்பி 'ஸ்கேன்' எடுக்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகளால் காசநோயின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களில் 84 சதவீதம் பேர் முதல் சிகிச்சையிலேயே குணமடைகின்றனர்.
அதன் பின்னர் தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்கள் குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டில் நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டவர் களின் தரவுகளை சுகாதாரத் துறை ஆய்வு செய்த போது நாடு முழுவதுமாக 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு காசநோய் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டுமே 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருந்துள்ளது. அவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 24,685 பேரும், அரசு மருத்துவமனைகளில் 50,837 பேரும் முதற்கட்ட சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் தமிழகத்தில் 3 சதவீதம் அதிகமாக காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
