காதலனை கரம்பிடிக்க எஸ்.ஐ. வேடம் போட்ட இளம்பெண்... காதல் ஜோடி கைது!

 
காதலனை கரம்பிடிக்க எஸ்.ஐ. வேடம் போட்ட இளம்பெண்... காதல் ஜோடி கைது!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் காதலனை கரம்பிடிக்க போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேடமணிந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அபி பிரபா என்ற இளம்பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு, இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. 

காதலனை கரம்பிடிக்க எஸ்.ஐ. வேடம் போட்ட இளம்பெண்... காதல் ஜோடி கைது!

இவர்கள் காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில், சிவாவின் தாயார் தன் மகனை பெண் போலீசாருக்குத் தான் திருமணம் செய்து கொடுப்பேன் என கூறியதாக தெரிகிறது.

இதனால் தனது காதலி அபி பிரபாவிடம், போலீஸ் எஸ்.ஐ., போன்று வேடம் அணிந்து வருமாறு சிவா கூறியுள்ளார். காதலனின் பேச்சைக் கேட்டு அபி பிரபா வாடகைக்கு போலீசார் அணிவதைப் போன்று உடை எடுத்துக் கொண்டு, போலீஸ் எஸ்.ஐ., போன்று வேடம் அணிந்தபடியே சிவாவின் தாயாரை நேரில் சந்தித்திருக்கிறார். 

காதலனை கரம்பிடிக்க எஸ்.ஐ. வேடம் போட்ட இளம்பெண்... காதல் ஜோடி கைது!

பணி குறித்து சிவாவின் தாயார் கேட்ட போது, அபி பிரபா தான் தாம்பரம் ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாக சிவாவின் தாயாரிடம் கூறியிருக்கிறார். இந்த விஷயம் ஊர் முழுக்க பரவிய நிலையில், வடசேரி போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

வடசேரி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் காதலர்கள் தங்களது திருமணத்தை உறுதி செய்துக் கொள்வதற்காக திட்டமிட்டு இப்படி போலியாக போலீஸ் எஸ்.ஐ. போன்று இளம்பெண் வேடம் அணிந்தது தெரியவந்தது. 

இதையடுத்து எஸ்.ஐ., போல் வேடமணிந்து ஏமாற்றிய அபி பிரபாவையும், திட்டம் வகுத்துக் கொடுத்த அவரது காதலனையும் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!