’சனாதனத்தை காக்க கடுமையான சட்டம் தேவை’.. பவன் கல்யாண் திட்டவட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்தப் பிரச்னைக்காக சனாதன தர்மம் விவகாரத்தை பவன் கல்யாண் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளார். கடந்த மாதம், பவன் கல்யாண் சனாதன தர்மம் மற்றும் அதன் நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவர கோரிக்கை விடுத்திருந்தார்.
சனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும், அவதூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும் கடுமையான தேசிய சட்டம் தேவை என்றும், இந்த சட்டத்தை முழு நாடும் உடனடியாக ஏற்க வேண்டும் என்றும் பவன் கல்யாண் கூறினார். கடந்த மாத தொடக்கத்தில் சனாதன தர்மம் தொடர்பாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பவன் கல்யாண் பேசினார்.
சனாதனம் என்பது வைரஸ் போன்றது, அதை அழிக்க வேண்டும் என்று தமிழகத்தில் ஒருவர் சொன்னார். இதை சொன்னவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். சனாதன தர்மத்தை அழிக்க முடியாது. சனாதன தர்மத்தை அழிக்க முயன்றால் உங்களை நீங்களே அழித்துக் கொள்வீர்கள் என்று பவன் கல்யாண் கூறினார். .உன்னைப் போல பலர் வந்து விட்டார்கள் ஆனால் சனாதன தர்மம் அப்படியே இருக்கிறது. ’’ மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும். சனாதன தர்மத்தின் மீதான தாக்குதலை கண்டிப்பதுதில்லை. அப்படி கண்டிக்காவிட்டாலும் அது தவறு தான்’’ என்று கூறியிருந்தார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!