தமிழகம் முழுவதுமான பட்டியல்... இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது... உங்க பெயர், முகவரியை செக் பண்ணிக்கோங்க!
இன்று தமிழகம் முழுவதுமான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. உங்கள் பெயர், முகவரி போன்றவைகளையும், குடும்பத்தின் அனைவரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக்கோங்க. இன்று வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்த பணிகள் இன்று முதலே தொடங்க உள்ளதால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் இவைகளுக்கு விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் போன்ற பணிகள் ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கி அக்டோபர் 18 வரை நடைபெற்றன.

இந்நிலையில், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதன்படி மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான மாவட்ட ஆட்சியர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதன் பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்களை தெரிவிப்பார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பட்டியலில் ஏற்கனவே உள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்தல், ஆதார் எண் இணைப்பு இவைகளுக்கு நாளை முதலே விண்ணப்பங்கள் பெறப்படும். அதற்கு படிவங்கள் 6, 6பி, 7, 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிகளை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பங்களை நேரில் அளிக்கலாம். அல்லது https://voters.eci.gov.in என்ற இணையதளம், 'VOTER HELPLINE' என்ற கைபேசி செயலி மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் வசதிக்காக தமிழகம் முழுவதும் உள்ள 69000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நவம்பர் 16 மற்றும் 17 தேதிகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் டிசம்பர் 24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025 ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
