பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி... 10,000 போலீசார் பாதுகாப்பு... முதல்வர் ஸ்டாலின் வருகை!

 
தேவர் குருபூஜை
 

இன்று 117வது தேவர் ஜெயந்தி மற்றும் 62வது குரு பூஜை, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், அரசு விழாவாக நடைபெறுகிறது.

இந்நிலையில், மதுரையில் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், அதன் பின் காரில் பசும்பொன் புறப்பட்டு சென்ற நிலையில், நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்துகிறார்.

தேவர் ஸ்டாலின்

அதிமுக., சார்பில் பொதுச்செயலர் பழனிசாமி, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ., - காங்., நாம் தமிழர்,  அமமுக, உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ள நிலையில், சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டாலின்

தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா கூறுகையில், ''ராமநாதபுரம் மாவட்டம் முழுதும், 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பசும்பொன்னில் கண்காணிப்பு பணியில் ஆளில்லா விமானம், 19 ட்ரோன் கேமராக்கள், 90 இடங்களில் அதிநவீன கேமராக்கள உள்ளன. போலீசாரால் அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும் என்றார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!