நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் இன்று அதிகாலையில் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் புகழ்பெற்ற சிவாலயமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண திருவிழா நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சி திருக்கல்யாண வைபவம் இன்று அதிகாலை கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவை யொட்டி நேற்று சம்பா நதியில் ஒற்றை காலில் தபசு இருக்கும் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சென்று காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். அதன் பிறகு அம்மன் கோவிலில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி திருநீறு பூசி வெண்பட்டு உடுத்தி ஒற்றை காலில் தபசு இருந்த காந்திமதி அம்பாள் மேளதாளம் முழங்க பக்தர்களுக்கு அருள் பாலித்த பிறகு மண்டபத்தில் எழுந்தருளி சுவாமி திருக்காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
நேற்று முதலே நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலையில் இன்று அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வருகை தந்தனர். நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!