நவம்பரில் தமிழகத்திற்கு கனமழை... வெதர்மேன் பதிவு!

 
மழை கனமழை வெதர்மேன்

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்  அக்டோபர் 20 ம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அப்போது உருவாக இருக்கும்  காற்றழுத்த தாழ்வு பலவீனமாக இருக்கும் எனவும் தமிழகத்திற்கு இதனால் பாதிப்பு இல்லை என  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில்  “அடுத்ததாக அக்டோபர் 20 ம் தேதி உருவாக இருக்கும்  குறைந்த காற்றழுத்தம்,பெரும்பாலும் அது பலவீனமாகவே இருக்கும். இதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லை எனலாம்.  அடுத்த வாரம் வடக்கு அந்தமான் அருகே இந்திய-சீனாவில் இருந்து வரும் அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை பற்றி கவலைப்பட தேவையில்லை.  அந்த காற்றழுத்த தாழ்வு நிலை அந்தமான் கடலுக்குள் நுழையும் போது அது நமது சென்னை அட்சரேகைக்கு மேலே இருக்கும்.  

வெதர்மேன்

இதனால், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறாத பட்சத்தில், அது தமிழகத்தை நோக்கி தள்ளப்படும். பெரும்பாலும் அது தீவிரமடைந்து மேலே சென்று விடும்.இதற்கடுத்து நவம்பர் மாதத்தில்  தமிழகத்திற்கு நிறைய  மழை பெய்யும்.  ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் எங்கு கனமழை பெய்யும் என்பதை நாம் அறிவோம்”, என தமிழ்நாடு வெதர்மேன்  பதிவிட்டிருந்தார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!