“கருவாட்டு சாம்பார் நல்லாயிருக்காது ப்ரோ...” விஜய்க்கு சீமான் சராமரி கேள்வி!

 
விஜய்க்கு சீமான் சராமரி கேள்வி
“ஒண்ணு சாம்பார்ன்னு சொல்லு. இல்லை கருவாடுன்னு சொல்லு. அதென்ன கருவாட்டு சாம்பார்? எங்கள் கொள்கைக்கு குறுக்கே தகப்பனே வந்தாலும் எதிரி தான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய்க்கு அடுத்தடுத்து சராமரியாக கேள்விகளை முன்வைத்துள்ளார். 

தவெக முதல் அரசியல் மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை விளக்கிப் பேசியிருந்த விஜய், திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் பாசிசம் குறித்து பேசியதை திருமா விமர்சித்த நிலையில், தமிழ்ன்னு சொல்லு இல்லை தேசியம்னு சொல்லு.. விஜய் கட்சியின் கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று சீமான் விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், நேற்று சென்னையில் நாதக பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்கிறார். ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சேற்றில் கால் வைக்க வேண்டும். இது என்ன ரெண்டிலும் ஒவ்வொரு கால் வைப்பது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?. அண்மையில் வந்த படத்தில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் அவரே நடித்ததால் குழம்பிவிட்டார் போல். நீங்கள் சொல்வது கொள்கையே இல்லை. வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ. ஒரு சாலையில் இடதுபுறம் நிற்க வேண்டும் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி மோதிவிடும். திராவிடமும், தேசியமும் ஒன்று என்பது நடுநிலை இல்லை. மிகக் கொடுமையான நிலை.

திமுக தான் சங்கி: மேடையில் செருப்பை கழற்றி விமர்சித்த சீமான்!!

நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் அல்ல. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். நான் குட்டிக் கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிதான் பெரியார், அம்பேத்கர் எல்லாம் படிக்க வேண்டும். நாங்கள் படித்து அதில் பி.ஹெச்டியே வாங்கிவிட்டோம். சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இது இல்லை தம்பி. இது நெஞ்சு டயலாக்.

எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்ட வேண்டாம். 2026ம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். 

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் அக்.27ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து பேசிய விஜய், “கொள்கை கோட்பாட்டு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து” எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!